Wednesday, September 14, 2011

////

கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: SDPI

நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளம் அருகே உள்ள இடிந்த கரை கிராமத்தில் நேற்று 11 ம் தேதி முதல் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 12-9-11 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் உண்ணா விரத பந்தலுக்கு வந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியபோது, "உயிர் வாழும் உரிமைக்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள். உங்களின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவதோடு SDPI-ன் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.

அவர் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசினை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் SDPI-ன் சார்பாக செப்டம்பர் 16 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து திருநெல்வேலியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment