Saturday, July 9, 2011

////
சென்னை : புளோரிடா பல்கலைக்கழகம், SDPI-ன் தேசிய துணை தலைவர் பேரா.நாஸ்னின் பேகம் அவர்களுக்கு பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

பேரா. நாஸ்னின் பேகம் அவர்கள் 2010 ல் நடைபெற்ற பெங்களூரு மகாநகர (BBMP) தேர்தலில் வெற்றி முதல் SDPI பெண் வேட்பாளர் ஆவார். அவர்கள் படராயன்புரா வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

////
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் தென் சென்னை மாவட்டம் சார்பாக லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 07.07.11 மாலை 4.30 மணிக்கு சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது.

சைதாபேட்டை தொகுதி தலைவர் முஹம்மது அனீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் P . முஹம்மது ஹுசைன் அவர்கள் கவன ஈர்ப்பு உரையாற்றினார். இறுதியில் சைதாபேட்டை தொகுதி செயலாளர் அப்துல் மஜீத் அவர்கள் நன்றியுரையற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய தென்சென்னை மாவட்டத் தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்களின் உரை சூழ்ந்திருந்த பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த ஆர்பாட்டாத்தில் பெரும் திரளான பொது மக்களும் SDPI - யின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.

Friday, July 8, 2011

////
தஞ்சையில் SDPI-ன் விழிப்புணர்வு ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை நகரத் தலைவர் இக்பால் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்டத் தலைவர் முஹம்மது ஃபாரூக் லோக் ஆயுக்தா பற்றியும் இச்சட்டத்தின் அவசியம் பற்றியும் மக்கள் மன்றத்தில் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

இதில் தஞ்சை நகர நிர்வாகிகள் , செயல் வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்டத் தலைவர் முஹம்மது ஃபாரூக் அவர்களின் விளக்க உரை பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.


Wednesday, July 6, 2011

////
தென் சென்னை மாவட்டம் SDPI சார்பில் துவக்க விழா பொதுக்கூட்டம் அண்ணா நகர் M.M.D.A பகுதியில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குதல், மேலும் மாணவர்களுக்கு காமராஜர் மற்றும் காயிதே மில்லத் கல்வி விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு அண்ணா நகர் தொகுதி தலைவர் P.M. ஜுனைத் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் S.R இஸ்மாயில், மாவட்ட துணைத்தலைவர் A.அகமது பாஷா, மாவட்ட பொருளாளர் A.ரிபாய் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் K. சேக்முகைதீன், ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் ஜுனைத் அன்சாரி, சைதை தொகுதி தலைவர் மஜீத் , M. அனீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா நகர் தொகுதி துணைத்தலைவர் M. அப்துல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் A. புகாரி தொகுப்புரை வழங்கினார்.

அகில இந்திய மீனவர் சங்க தலைவர் G .ஆண்டன் கோமஸ், சுந்தராலயமுதியோர் இல்லத்தின் நிறுவனர் V.S.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். SDPI -ன் தமிழ் மாநில பொதுச்செயலாளர் B. அப்துல் ஹமீது மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் P.முகமது உசேன், R.K.நகர் தொகுதி செயலாளர் ரத்தினம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அண்ணா நகர் தொகுதி செயலாளர் நன்றியுரையாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென் சென்னை மாவட்ட செயலாளர் S.முகமது சாலிஹ் கொடியேற்றி வைத்தார்.தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் A.அகமது பாஷா, தொழிலதிபர் S.சையது இப்ராஹிம் ஆகியோர் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினர். தென் சென்னை மாவட்ட தலைவர் P.முகமது உசேன், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ உதவியை வழங்கினார். M.M.D.A அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு காமராஜர் மற்றம் காயிதே மில்லத் கல்வி விருதை மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது வழங்கினார்