Sunday, June 26, 2011

////

SDPI திருபுவனம் கிளையின் புதிய 3 நிர்வாகிகள் தேர்வு

24-6-11 வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்டம் SDPI திருபுவனம் கிளையில் தேர்வு செய்யப்படாமல் இருந்த கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக மாவட்டத் தலைவர் முஹம்மது ஃபாரூக் கலந்து கொண்டு தேர்தலை சிறப்பாக நடத்தினார். இந்த தேர்தலில் கிளைக்கான துணைத்தலைவர் ,இணைச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த தேர்தலில் கிளையின் செயல்வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

புதிய நிர்வாகிகள் :-
H.ஹாஜி முஹம்மது (துணைத்தலைவர்)
M.ஹிசாமுதீன் (இணைச்செயலாளர்)
R.முஹம்மது அஸ் (பொருளாளர்)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கூறுகையில் கிளையில் செயல்வீரர்களை அதிகப்படுத்தவும் , வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருபுவனத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் SDPI-ன் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றனர். மேலும் திருபுவனத்தில் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment