Sunday, May 27, 2012

////

SDPI தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு


     SDPI-ன் தஞ்சை மாவட்ட பொதுக்குழு 27-05-12 அன்று கும்பகோணம் A.M.மஹாலில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் K.S.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தஞ்சை மாவட்ட தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன்படி 

  • மாவட்டத்தலைவர் -இப்ராஹிம் (கும்பகோணம்)
  • மா.து.தலைவர் – அன்சாரி (ஆவூர் )
  • மா.பொ.செயலாளர் – முஹமது ஃபாருக் (ராஜகிரி)
  • மா.செயலாளர் – தாஜ் (மேலக்காவேரி)
  • மா.செயலாளர் – முஹமது காலித் (திருமங்கலக்குடி)
  • மா.பொருளாளர் – ஷரீஃப் (ராஜகிரி)


     புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவாட்டத்தலைவர் இப்ராஹிம் அவர்கள் நமது தளத்திற்கு அளித்த பேட்டியில் இன்ஷா அல்லாஹ் இன்னும் மூன்று மாதங்களில் SDPI–ன் கிளைகள் குறைந்தபட்சம் 15 ஊர்களில் அமைக்கப்படும் என்றும் SDPI–ன் தொழிற்சங்க பிரிவான SDTU மாவட்டமெங்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.மேலும் SDTU–க்கான மாவட்ட கமிட்டி விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் கூறினார்.

புதிய நிர்வாகிகள் திறம்பட செயல்பட நமது வாழ்த்துக்கள்.



0 Reactions to this post

Add Comment

    Post a Comment